A B
c v
அ. க. அரவிந்தன்
க.அரவிந்தன் தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியை சேர்ந்தவர். சமகால தமிழ் இலக்கியத்தின் போக்குகளை தொடர்ந்து அவதானித்து கட்டுரைகள் எழுதி வருகிறார். ஜெயமோகன், ஸ்டாலின் ராஜாங்கம், டி.தருமராஜ் போன்றோரை ஆதர்சமாக கொண்ட அரவிந்தன் தலித்தியம், நாட்டுப்புறவியல் சார்ந்து எழுத இயங்க முனைகிறார்.

அ.ராமசாமி
பேராசிரியர் அ.ராமசாமி (பிப்ரவரி, 17 1959) தமிழ் இலக்கிய விமர்சகர். ஊடக ஆய்வாளர்.நாடகம் மற்றும் திரைவிமர்சனம் செய்துவருபவர். கல்வியாளர். பின்நவீனத்துவ பார்வைகொண்டவர்.

அகரன்
பிரான்ஸில் வசித்துவரும் எழுத்தாளர். அரசியல் தத்துவ இறுக்கமில்லாத, அழகியல் கற்பனைத் திறன்கொண்ட படைப்பிலக்கியவாதியாக விமர்சகர்களால் மதிப்பிடப்படுகிறார்.

அகழ்

அசுரா நாதன்
தலித்தியச் செயற்பாடுகளில் இயங்கி வருபவர். தனிமனித அனுபவத்தைக் கடந்து இலக்கியம், வரலாறு வழியாக சமூக முரணியக்கத்தை பேருணர்வுடன் புரிந்துகொள்ள முற்படுபவர். பிரான்ஸ் தலித் சமூக மேம்பாட்டு முன்னனியின் பிரதான செயற்பாட்டாளர்களில் ஒருவர்.

அஜிதன்
அஜிதன் தமிழில் எழுதிவரும் எழுத்தாளர், நாவலாசிரியர், உதவி இயக்குனர். ’மைத்ரி’ என்ற நாவலை எழுதியுள்ளார்.
தமிழ் விக்கியில்

அதீதன்
மதுரையில் வசித்து வரும் அதீதன் பல்வேறு இதழ்களில் கவிதைகளும், சிறுகதைகளும் எழுதி வருகிறார். இவரது "தற்கொலைகள் அவசியமானவை" "மேதகு அதிகாரி" ஆகிய இரண்டு கவிதைத் தொகுப்புகளும், "செல்லம்மா" என்கிற நாவலும் வெளிவந்திருக்கின்றன.

அனோஜன் பாலகிருஷ்ணன்
தமிழில் இளைய தலைமுறைப் படைப்பாளிகளில் குறிப்பிடத்தக்க சிறுகதை ஆசிரியர். இரண்டு சிறுகதைத் தொகுப்புக்கள் வெளியாகியிருக்கின்றன. இலக்கிய விமர்சன, மதிப்பீடுகளிலும் தொடர்ச்சியாக ஈடுபட்டுவருகிறார். தற்போது இங்கிலாந்தில் வாழ்கிறார்.

அரவிந்தன்
அரவிந்தன், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், இதழாளர். சென்னையில் வசிக்கிறார். தி டைம்ஸ் ஆஃப் இந்தியா, இந்தியா டுடே, தமிழ் இந்து போன்ற பல்வேறு பிரபல இதழ்களில் பணியாற்றியவர். காலச்சுவடு பதிப்பகத்தில் தற்போது பதிப்பாசிரியராகப் பணியாற்றுகிறார்.
அரவிந்தன் பெருமாள்

அரவின் குமார்
அரவின் குமார் மலேசியத் தமிழ் எழுத்தாளர். இவர் சிறுகதை, கட்டுரை எழுதிவருகிறார்.

அரிசங்கர்
அரிசங்கர் புதுச்சேரியைச் சேர்ந்தவர். பிரபஞ்சனுக்குப்பின் பாண்டிச்சேரி வாழ்க்கையை எழுதும் குறிப்பிடத்தக்க படைப்பாளியாக அரிசங்கர் கருதப்படுகிறார். பதிலடி, ஏமாளி, உடல், சப்தங்கள் ஆகிய சிறுகதைத் தொகுப்புகளையும், மாயப்படகு, பார்க்காடி, பாரிஸ், உண்மைகள் பொய்கள் கற்பனைகள் மற்றும் மாகே கஃபே ஆகிய நாவல்களையும் வெளியுட்டுள்ளார்.

அலிஸாண்ட்ரா டட்டன்
அமெரிக்காவின் மின்னிஸோட்டா மாகாணத்தைச் சேர்ந்தவர். தி லாஃப்ட் லிட்டரரி சென்ட்டரிலும், இன்ட்டர்லோகென் ஆர்ட்ஸ் கேம்ப்பிலும் பயிற்சியாளராக இருக்கிறார். அதிகம் கலை வரலாறு மற்றும் பெண்ணியம் சார்ந்த கதைகள் எழுதி வருபவர்.
ஈரோடு பெருந்துறையை சேர்ந்த அழகிய மணவாளன், கட்டுரையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். நாவல் கலை பற்றிய மலையாள நாவலாசிரியர் பி.கே.பாலகிருஷ்ணனின் விமர்சன நூலை "நாவலெனும் கலைநிகழ்வு" எனும் தலைப்பில் மொழிபெயர்த்துள்ளார். இலக்கியத்திற்கு அப்பால் நிகழ்த்துகலையான கதகளியில் அவருக்கு ஆர்வமுண்டு.

அழகுநிலா
அழகுநிலா தஞ்சை மாவட்டத்திலுள்ள செண்டங்காடு ஊரைச் சேர்ந்தவர். தற்போது சிங்கப்பூரில் வசித்து வருகிறார். ‘ஆறஞ்சு’, ‘சங் கன்ச்சில்’ (சிறுகதைத் தொகுப்புகள்), ‘சிறுகாட்டுச் சுனை’ (கட்டுரைத் தொகுப்பு), ‘கொண்டாம்மா கெண்டாமா’, ‘மெலிஸாவும் மெலயனும்’, ‘மெலிஸாவும் ஜப்பானிய மூதாட்டியும்’, ‘பா அங் பாவ்’ (குழந்தை நூல்கள்) ஆகியவை இவரது நூல்களாகும்.

ஆசை
ஆசிரியர் குறிப்பு : இயற்பெயர் ஆசைத்தம்பி. கவிஞர். பத்திரிக்கையாளர். 'சித்து’ (2006), ‘கொண்டலாத்தி’ (2010), ‘அண்டங்காளி’ (2021), ‘குவாண்டம் செல்ஃபி’ (2021) ஆகிய கவிதை நூல்களின் ஆசிரியர். க்ரியா அகராதியில் (2008) துணையாசிரியராகப் பணியாற்றியிருக்கிறார். மொழிபெயர்ப்புகளிலும் ஈடுபட்டுவரும் ஆசை காந்தி பற்றி ‘என்றும் காந்தி’ (2019) எனும் நூலையும் வெளியிட்டுள்ளார்.

ஆனந்த்
கவிஞர், மனநல ஆலோசகர், மொழிபெயர்ப்பாளர். இந்தியப் புராணங்களை ஆழ்ந்து பரிசீலிக்கும் ராபர்ட்டோ கலாஸோவின் 'க' உள்ளிட்ட நாவல்களை மொழிபெயர்த்தவர்.

ஆனந்த் குமார்
கோவையில் வசித்துவரும் ஆனந்த் குமார், தொடர்ச்சியாக கவிதைகள் எழுதிவருகிறார். ஆவணப்படங்கள், குறும்படங்கள், புகைப்படங்கள் எடுப்பதிலும் முனைப்போடு இயங்கிவருகிறார். ‘டிப் டிப் டிப்’ என்ற கவிதைத்தொகுப்பின் ஆசிரியர்.

ஆர் சீனிவாசன்
ஆர் சீனிவாசன். பிறந்தது சென்னையில், வசிப்பது பெங்களூரில். படித்தது பொறியியல், விரும்புவது ஓவியமும், எழுத்தும். சொல்வனம், வாசகசாலை, மயிர், திண்ணை போன்ற தளங்களில் கட்டுரைகள், சிறுகதைகள் எழுதி வருகிறார்.

ஆர். காளிப்பிரஸாத்
சிறுகதையாசிரியர். இலக்கிய விமர்சனங்கள் எழுதுவதிலும், மொழியாக்கங்களிலும் ஆர்வம் கொண்டவர். இவரின் சிறுகதைகள் ‘ஆள்தலும் அளத்தலும்’ என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது, ‘தம்மம் தந்தவன்’ என்ற நாவலைத் தமிழில் மொழியாக்கம் செய்துள்ளார்.

ஆர். காளிப்பிரஸாத்
சிறுகதையாசிரியர். இலக்கிய விமர்சனங்கள் எழுதுவதிலும், மொழியாக்கங்களிலும் ஆர்வம் கொண்டவர். இவரின் சிறுகதைகள் ‘ஆள்தலும் அளத்தலும்’ என்ற தலைப்பில் தொகுப்பாக வெளிவந்துள்ளது, ‘தம்மம் தந்தவன்’ என்ற நாவலைத் தமிழில் மொழியாக்கம் செய்துள்ளார்.

ஆழியாள்
ஆழியாள் தற்சமயம் ஆஸ்ரேலியாவில் வசித்துவருகிறார். உரத்துப் பேச (2000), துவிதம் (2006), கருநாவு (2013), பூவுலகை கற்றலும் கேட்டதும் (2017), நெடுமரங்களாய் வாழ்தல் (2020) முதலான அவரது கவிதைத் தொகுப்புக்கள் இதுவரை வெளியாகியுள்ளன.

இசை
கவிஞர் இசை தமிழில் நவீனக்கவிதைகளை எழுதி வரும் கவிஞர். மென்மையான நகையுணர்வு கொண்டவை இவருடைய கவிதைகள். உறவுகளின் சிக்கல்களையும் சமகாலத்தின் அரசியலையும் கேலி இல்லாமல் புன்னகையுடன் கூறுபவை.
நன்றி : தமிழ் விக்கி

இரமணிதரன் கந்தையா
ஈழத்தை பூர்விகமாகக்கொண்ட இரமணிதரன் கந்தையா, தற்சமயம் அமரிக்காவில் வசித்துவருகிறார். ‘சித்தார்த்த சே குவேரா’ என்ற புனைபெயரிலும் கவிதைகள் சிறுகதைகள் எழுதிவருபவர். ஓவியம் மற்றும் புகைப்பட துறையிலும் ஆர்வம் கொண்டவர். பல்வேறு இதழ்களில் வெளியாகிய ஆக்கங்கள் இன்னும் தொகுக்கப்படாமல் விரவிக்கிடக்கின்றன.

இரம்யா
விருதுநகர் திருவில்லிபுத்தூரைச் சேர்ந்தவர். தமிழிலக்கிய வாசகர்

இரா. இராகுலன்
இரா. இராகுலன் தமிழில் எழுதிவரும் கவிஞர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த மேல்மலையனூர் பகுதியைச் சேர்ந்தவர். கடவுளின் கடவுள், பாதியில் நிறுத்தப்பட்ட ஓவியம் ஆகிய கவிதைத் தொகுப்புகளின் ஆசிரியர். சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆய்வியல் நிறைஞர் படிப்பை முடித்து தற்பொழுது புதுவைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டு வருகிறார். தளம், உயிர் எழுத்து, காற்றுவெளி, உதிரிகள், சொ
இராகவன்
இராகவன் ஈழத்தைச் சேர்ந்த எழுத்தாளர். நவீன புனைவில் வடிவங்கள், உள்ளடக்கங்கள் சார்ந்து வெவ்வேறு பகுப்புக்களைச் செய்பவர். ‘கலாவல்லி முதலான கதைகள்’ , ‘விட்டில்–சமகால அரசியல் பகுப்பாய்வு’ என்ற சிறுகதை தொகுப்புகளின் ஆசிரியர்.

இல. சுபத்ரா
இல.சுபத்ரா, பள்ளிக் கல்வித் துறையைச் சேர்ந்தவர். மொழிபெயர்ப்பாளர். திருப்பூரில் கணவர் மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். அமிதபா பக்சியின் ‘பாதி இரவு கடந்துவிட்டது(Half the night is gone)’ நாவலின் மொழிபெயர்ப்பு, 'அது உனது ரகசியம் மட்டுமல்ல', யுவான் ரூல்ஃபோவின் 'எரியும் சமவெளி' , அனா பர்ன்ஸின் 'ஆயன்(Milkman)' ஆகியன இவரது மொழிபெயர்ப்பு நூல்கள். பல்வேறு இணைய இதழ்களிலும் புனைவு அபுனைவு இருவகைமைகளிலும் மொழிபெயர்த்து வருகிறார்.
