June 20, 2026 கலாமோகனின் இந்தத் தொகுப்பு, ஞாபகங்களை முன்வைப்பதில்லை; அப்படி வைக்கும் பட்சத்தில் அவை ‘கதை’யாக உருவாகியிருக்கும். இவருடையவை, அனுபவத்தைப் பற்றி ‘சிந்திப்பன’வாக எழுதப்பட்டவை.
எங்களுக்கு வரும் விண்ணப்பங்களில் பழங்குடியின மாணவர் எண்ணிக்கை அதிகம் இருக்கும். ஆனால் இடம் கொடுக்க முடியாது. நல்ல மதிப்பெண் இருந்தும் படிக்க ஆர்வம் இருந்தும் சேர்க்க முடியாது. நாமக்கல் கல்லூரியில் ஆயிரம் இடங்கள் இருக்கின்றன. பத்துப் பேருக்குத்தான் இடம் கொடுக்க முடியும்.
ஒரு சொல்லின் பயன்பாட்டில் உள்ள பல்வேறு மாற்றங்களைப் பதிவு செய்வதை விட, அவற்றுள் எந்த அர்த்தம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது என்று தீர்ப்பளிப்பது மிகவும் கடினமானது. ஆனால், இந்த கடினமான பணியே எல்லாவற்றையும் விட மிக மிக முக்கியமானது.
படிமம் என்பது ஒரு குறியீட்டு வடிவம். தான் உருவான சட்டகத்தை மீறி பல்வேறு அர்த்த சாத்தியங்களை அடையக்கூடியது. தன் உடனடி வெளிப்பாட்டுக்கு அப்பால், பல தளங்களில் செயல்படக்கூடியது. அது எப்படி வெவ்வேறு ரூபங்களை எடுக்கிறது என்பதையே ஏ.வி.மணிகண்டன் தொடர்ந்து பேசுகிறார்.
சில ஆசிரியர்கள் தம் துறையில் மாணவர் எண்ணிக்கையைக் கூட்டக் கூடாது என்று நினைப்பார்கள். கூட்டினால் தமக்கு வேலை அதிகமாகி விடும் என்பது காரணம். அறிவியல் துறையில் மாணவர் எண்ணிக்கை கூடினால் செய்முறைப் பயிற்சி, பதிவேடுகள் என வேலை கூடும். அதைத் தவிர்க்க
நாற்பது வயதில், ஒரு மனிதன் கொடி முந்திரியின் தண்டுபோல ஒல்லியாகவே இருந்தாலும், அவனது தசைகள் அவ்வளவு சீக்கிரத்தில் சூடாகி விடுவதில்லை. சில சமயங்களில், முப்பது வயது தடகள வீரர் ஒருவரை முதுபெரும் வீரர் என்று குறிப்பிடும் விளையாட்டுப் பத்திகளைப் படிக்கும்போது, அவன்
பேகன் கடையெழு வள்ளல்களில் ஒருவன். மயிலுக்குப் போர்வை தந்தவன் என்கிற கதைகள் பலரும் அறிந்தவை. ஆனால் அவன் தன் மனைவி கண்ணகியை விடுத்து வேறொருத்தியுடன் வாழ்ந்து வந்த கதை அதிகம் அறிய வராதது. புலவர்கள் சிலர் அவனுக்கு அறிவுரைத்துப் பாடியுள்ளனர். அவர்களில்
தமிழ் மரபு கல்விக்காக இடம்பெயர்தலை ஊக்குவிக்கும் வரலாறு கொண்டது. நம் அகப்பொருள் இலக்கணம் காதலர் பிரிவுக்கான காரணத்தை வகைப்படுத்தும் போது ‘ஓதற் பிரிவு’ என்பதையே முதலில் கூறுகிறது. திருமணம் செய்துகொண்ட பிறகு மூன்றாண்டு வரைக்கும் கல்விக்காகத் தலைவன் பிரிந்து செல்லலாம் எனக்
தஸ்தயெவ்ஸ்கியின் பிசாசுகள் நம்முடைய சமகாலத்தவர்கள். சொல்லப்போனால், அவை மிகத் துல்லியமான நடைமுறை யதார்த்தத்தைக் கொண்டுள்ளன. தீமைக்கும் நலிவிற்கும்(infirmity) இடையிலும், பிசாசால் பீடிக்கப்படுவதற்கும் (possession) சுயபகுப்பாய்விற்கும் (reflection) இடையிலும் உள்ள மறைமுகமான ஒற்றுமையே அவர் கண்டறிந்த மாபெரும் உண்மை எனலாம்.
நரம்பணு சார்ந்த வன்முறை அனைத்து நோய் எதிர்ப்பு பார்வைகளிலிருந்தும் தப்பிவிடுகிறது. ஏனெனில் அதற்கு எதிர்மறைத்தன்மை இல்லை. நேர்மறைத்தன்மையின் வன்முறை இழப்பை ஏற்படுத்துவதில்லை; அது நிரம்பச் செய்கிறது; அது விலக்குவதில்லை; தீர்ந்துபோகச் செய்கிறது. அதனால்தான் அது துணையற்ற அறிதலுக்கு புலப்படாததாக இருக்கிறது.
ஐரோப்பிய நாடுகளுக்கு உயர்கல்வி பயிலச் செல்லும் மாணவர்கள் மூன்று மாதத்தில் இருந்து ஆறு மாதத்திற்குள் அம்மொழியைக் கற்றுத் தேர்ந்து அதில் உயர்கல்வி பெறுகிறார்கள். எப்படி முடிகிறது? மொழிக் கல்வியோடு இலக்கியக் கல்வியைக் குழப்புவதில்லை. நாம் பன்னிரண்டு ஆண்டு பள்ளியில் ஆங்கிலம் கற்றாலும்
பாவம், எங்கொழந்தை! நெறைய பட்டுட்டான். நாலு வருஷத்துல இது என்னோட ஏழாவதோ எட்டாவதோ முயற்சி. இந்த தடவை நான் விட்டுட மாட்டேன். இதுவரை அவன் பிடிச்சு நின்னுட்டான். ஆமாம், பிடிச்சுதானே நின்னிருக்கான் இத்தன வருஷமா! எப்போலேர்ந்து? அவனுக்கு நாலு வயசு இருக்குமா
இயற்பெயர் கோபயாஷி யதாரோ, கவிதைக்கென இஸ்ஸா என்கிற புனைப்பெயரைச் சூடிக்கொண்டார். இஸ்ஸா என்பதன் பொருள் ஒரு குவளைத் தேநீர். ஜப்பானிய ஹைக்கூ கவிஞர்களில் முதன்மை நால்வர்களான பாஷோ, போஸான், சிக்கி இவர்களுள் ஒருவராக அறியப்படுகிறார். இஸ்ஸாவின் கவிதைகள் அன்றாடம் புழங்கும் மொழியில்