சாபங்களே வரமாக : கலாப்ரியா
ஆழ்வாரைப் பார்த்ததும் சாரதியின் மனைவிக்கு அழுகை பொத்துக் கொண்டு வந்தது. அதற்கே கன்னங்களும் மூக்கும் சிவந்து போயின. ஆள் நல்ல நிறம், கொஞ்சம் ஒல்லியான தேகம். ஒரு முறை, ஏதோ ஒரு விழாவில் அவரைப் பார்த்திருக்கிறான். இப்போது இன்னும் ஒல்லியாகத் தெரிந்தார்.
