மம்மர் அறுக்கும் மருந்து (13) – அரசு அனுமதிப்பதை ஆசிரியர்கள் தடுக்கிறார்கள்: பெருமாள்முருகன்
சில ஆசிரியர்கள் தம் துறையில் மாணவர் எண்ணிக்கையைக் கூட்டக் கூடாது என்று நினைப்பார்கள். கூட்டினால் தமக்கு வேலை அதிகமாகி விடும் என்பது காரணம். அறிவியல் துறையில் மாணவர் எண்ணிக்கை கூடினால் செய்முறைப் பயிற்சி, பதிவேடுகள் என வேலை கூடும். அதைத் தவிர்க்க




















