மூன்றாவது பிரக்ஞை : விஷால் ராஜா
விழிப்பற்ற செயலும் ஈடுபாடும் பெருகிவரும் காலத்தில் ஏ.வி.மணிகண்டனின் கட்டுரைகள் "பார்வையின்" அல்லது “காண்பதன்" முக்கியத்துவத்தை பேசுகின்றன. எல்லோரும் காணப்பட விரும்பும் காலத்தில், விலகி நின்று காண்பதன் தேவையை முன்மொழிகின்றன.
