வெறுங்கூட்டின் கண்ணீர் : பார்கவி
கா சிவாவின் கவிதைகள், கலைக்கும் – அதன் ஆராதகனுக்கும் இடையில் நடக்கும் கண்ணாமூச்சி ஆட்டம். தெய்வத்திற்கு அது மற்றுமொரு நாடகமாக இருக்கலாம். எழுத்தாளரிடமிருந்து துளிர்ப்பது உண்மையான கண்ணீர் திவலைகள். கண்ணீரை எடை போட முடியாது. அது கலையாக சித்திக்கக் காத்திருக்கலாம். சிந்திய