வேப்பங்குளம் : சுரேஷ்குமார இந்திரஜித்
ரஞ்சிதாவைப் பற்றி நிறையக் கற்பனைக் கதைகள் பரவின. ரஞ்சிதாவின் விருப்பத்திற்குரிய தர்மதுரை ராஜா ஆளும் நிலப்பரப்பிற்கு அடுத்துள்ள நிலப்பரப்பை ஆள்பவன் குலசேகர ராஜா. தர்மதுரையைக் காட்டிலும் படைபலம் கொண்டவன். அவன் ரஞ்சிதாவைப் பற்றிக் கேள்விப்பட்டு அவள் மீது ஆசை கொண்டான்.
