காட்சி மாறுகிறது நிழல் மலைகள் சாய்கின்றன இன்னொரு மலையின் ஸ்தூலத்தில் பறவைகள் அஞ்சுகின்றன விலங்குகள் மருள்கின்றன யாரோ ஏற்றிய தீபம் அணையவா என நடுங்குகிறது
இடுப்பளவு நீரில் என் உடலை விட்டுவிட்டு நான் மட்டும் இன்னும் ஆழத்திற்குச் சென்றேன். அலைகள் சிவந்தபோது திரும்பிப் பார்த்தேன் என் கால்கள் கரையிலேயே இருந்தன.
துப்பாக்கியை கொலை எந்திரமாக சமூகம் எப்படி வடிவமைத்தது? ஒரு உடலும் இன்னொரு உடலும் குறைந்தபட்சம் தொடவோ, மோதவோ தேவை இல்லாது சக்தி விரயமின்றி தொலைவில் இருந்தவாறு காயப்படுத்தவும் கொலை செய்யவும் ஒரு கருவியைக் கண்டுபிடித்திருக்கிறோம். அதை நவீனப்படுத்தியபடியும் வந்திருக்கிறோம்.
கவிஞன் என்பவன் பாசாங்குகாரன் அவன் எந்தளவு முழுமையாகப் பாசாங்கு செய்கிறானென்றால் தான் உண்மையில் உணரும் வலியைக்கூட ஒரு பாவனை வலியாக்கிவிடுகிறான். அவன் எழுதுவதை வாசிப்பவர்கள், வலியைப்பற்றிப் படிக்கும்போது, உண்மையில் உணர்வது அவன் உணர்ந்த இவ்விரண்டு வலிகளையும் அல்ல, அவர்கள் இது வரை
ஆழ்வாரைப் பார்த்ததும் சாரதியின் மனைவிக்கு அழுகை பொத்துக் கொண்டு வந்தது. அதற்கே கன்னங்களும் மூக்கும் சிவந்து போயின. ஆள் நல்ல நிறம், கொஞ்சம் ஒல்லியான தேகம். ஒரு முறை, ஏதோ ஒரு விழாவில் அவரைப் பார்த்திருக்கிறான். இப்போது இன்னும் ஒல்லியாகத் தெரிந்தார்.
என் மனதில் தங்கிய படிமம் மிகவும் எளிமையானது: தான் நேசிக்கும் ஒன்றையே, அதைச் சரியாக அடையாளம் காணத் தவறியதன் விளைவாக, ஒருவர் மனதறியாமல் சிதைத்துவிடும் ஒரு துயரச் சித்திரம்தான் அது.
அகழ் இணையக் கூடுகைகள் - 03 கவிஞர் இசையுடன் வாசகர் கலந்துரையாடல் தலைப்பு : "மலை என மாரி என" கபிலரின் சங்கப் பாடல்களை முன்வைத்து "அகழ்" இதழில் வெளியான இசையின் கட்டுரைகளை மையப்படுத்திய உரையாடல்
அறை நிறைய ஓவியங்கள். நீண்ட நாட்களாகத் திறக்கப்படாததால் அறை முழுதும் தூசு படிந்து மங்கிக் கிடந்தது. என் கைத்தடியை ஊன்றி எடுத்த இடத்தில் தூசு நீங்கி வட்டமாகத் தடம் தெரிந்தது. வெகுகாலம் கழித்து அவ்வறையில் நுழைந்தேன். மனசில் என்னென்னவோ ஞாபகங்கள் கிளர்ந்தன.
காமம் வதைக்காத உயிர் எது? எவ்வளவு லட்சியங்களை, எவ்வளவு உன்னதங்களை காவு கொள்ளும் காளி அது? எத்தனை மகத்துவங்கள் அதன் முன் வாலைச்சுருட்டி கொண்டு மூலையில் அமர்ந்திருப்பதை நாம் பார்த்துவிட்டோம். சங்கக்கவித் திரட்டு முழுக்கவும் தலைவியரைப் பசலை படாத பாடு படுத்தியுள்ளது.
எனக்குத் தோன்றுவது, மற்ற கலைவடிவங்களைவிட கவிதை முழுமையாக அறிந்து கொள்ள முடியாத ஒரு மர்மத்தைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்கிறது. அது திடீரென்று ஒரு விபரீதம் போல நிகழ்கிறது. யாரும் இதுவரை தொடாத ஒரு இடத்தில் திடீரென தன்னுடைய கைகளை நீட்டுகிறது. அதனால்தான்
நவீனக் கலை எப்போதும் திரளை தனக்கு எதிராக வைத்திருக்கக் கூடியது. நவீனக் கலை அடிப்படையிலேயே பொது விருப்பத்திற்கு எதிரானது. மேலும் அது பிரபலத்திற்கு எதிரானதும்கூட.
ஊரிலுள்ள எல்லாவற்றையும் மிஞ்சி மிளிர வேண்டுமோ என்னவோ, சூரியன் தன் கதிர்களை மேலும் அழுத்தமாக வீசிக்கொண்டிருந்தது. கூளியன் தன் பலமான இடது புஜத்தை மூக்கின் மேல் குறுக்காக வைத்து, கையை யானைத் துதிக்கைபோல் ஆட்டினான். வலக்கையில் சிறு மரக்குச்சியை வாள்போல் வீசிக்கொண்டு,
நாம் அடிக்கடி, “கவிதையை கற்றுக்கொள்ள முடியுமா?” என்று கேட்கிறோம். பொதுவாக, கவிதை என்பது உணர்ச்சியும் மொழியும் சேர்ந்த ஒன்று என்று நினைக்கிறோம். ஆனால் ஒரு கவிதையை உருவாக்குவது அவை இரண்டு மட்டும்தானா? அல்லது இன்னும் பல கூறுகள் அதற்குள் செயல்படுகின்றனவா? அந்தக்