“பின்னுரையும் குறிப்புகளும் மொழிபெயர்ப்பாளன் அடைந்த தோல்வியின் வாக்குமூலங்களே” – ஏ. கே. ராமானுஜன் நேர்காணல் – பகுதி 1
மொழிபெயர்ப்பதற்கு நான் என் சுய குரலைத்தான் பயன்படுத்த வேண்டியிருக்கிறது. நான், தொல்கவிஞனின் குரலாக தன் குரலை ஆக்கும் மாயக்குரல் திறன் கொண்ட மொழிபெயர்ப்பாளர் அல்ல. அதில் எனக்கு நம்பிக்கையும் இல்லை. நீங்கள் மொழிபெயர்க்கும் மொழி உங்களிடமிருந்தே வருகிறது. எத்தனை முயன்றாலும், அதிலிருந்து
