மம்மர் அறுக்கும் மருந்து (14) – உள் ஒதுக்கீடு என்பது வெளியேற்றுவது அல்ல: பெருமாள்முருகன்
எங்களுக்கு வரும் விண்ணப்பங்களில் பழங்குடியின மாணவர் எண்ணிக்கை அதிகம் இருக்கும். ஆனால் இடம் கொடுக்க முடியாது. நல்ல மதிப்பெண் இருந்தும் படிக்க ஆர்வம் இருந்தும் சேர்க்க முடியாது. நாமக்கல் கல்லூரியில் ஆயிரம் இடங்கள் இருக்கின்றன. பத்துப் பேருக்குத்தான் இடம் கொடுக்க முடியும்.




















