மம்மர் அறுக்கும் மருந்து (9) – உயிர்களின் அடிப்படை உணர்வாகிய காதலை யாராலும் தடுக்க முடியாது : பெருமாள்முருகன்
‘ஆசிரியர்களுக்கு எதிரானவன்’ என்று எனக்குப் பெயருண்டு. பெயரென்ன, வசவுண்டு. ‘உள்ளிருந்து காட்டிக் கொடுக்கும் துரோகி’ என்கின்றனர். உள்ளிருப்பவருக்குத் தானே என்ன நடக்கிறது என்பது தெரியும்? ஒருபடைப்பாளராக இருந்துகொண்டு எதையும் வெளிப்படுத்தாமல் இறுகி இருக்க முடியுமா?



















