மம்மர் அறுக்கும் மருந்து (12) – கல்விக்காக இடம்பெயர்தல் தமிழ் மரபு : பெருமாள்முருகன்
தமிழ் மரபு கல்விக்காக இடம்பெயர்தலை ஊக்குவிக்கும் வரலாறு கொண்டது. நம் அகப்பொருள் இலக்கணம் காதலர் பிரிவுக்கான காரணத்தை வகைப்படுத்தும் போது ‘ஓதற் பிரிவு’ என்பதையே முதலில் கூறுகிறது. திருமணம் செய்துகொண்ட பிறகு மூன்றாண்டு வரைக்கும் கல்விக்காகத் தலைவன் பிரிந்து செல்லலாம் எனக்




















