வலசை : கார்த்திகா முகுந்த்
அறை நிறைய ஓவியங்கள். நீண்ட நாட்களாகத் திறக்கப்படாததால் அறை முழுதும் தூசு படிந்து மங்கிக் கிடந்தது. என் கைத்தடியை ஊன்றி எடுத்த இடத்தில் தூசு நீங்கி வட்டமாகத் தடம் தெரிந்தது. வெகுகாலம் கழித்து அவ்வறையில் நுழைந்தேன். மனசில் என்னென்னவோ ஞாபகங்கள் கிளர்ந்தன.
