March 28, 2024
கேட்கும் கேள்விகளிலிருந்தும்
அளிக்கும் பதில்களிலிருந்தும்
கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும்
நமக்கிடையேயான தூரத்தை
நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம்
தொடர்ந்து எழுப்பும் கேள்விகள்
உடைத்து உடைத்து உள் பார்க்கிறது
March 26, 2024
அம்மா அவளை கூட்டிப்போக வந்தபோது அவள் மனது முழுவதும் தேனின் நினைப்பால் நிறம்பியிருந்தது. அந்த பரவசத்தை யாரிடமும் அவளால் சொல்ல முடியவில்லை. ரிக்ஷாவில் போகும்போது மாலையின் எதிர்வெளிச்சத்தில் அம்மாவின் முகம் எப்போதையும் விட அழகாக, பொன் பூத்ததுபோல் மேலும் பொலிவாக இருந்ததாக அவளுக்குத் தோன்றியது. அம்மா எப்போதும் அம்மா செய்வதைப்போல அவளை “ராதுக்குட்டி!” என்று நெருக்கி அவள் சிறு விரல்களில் முத்தமிட்டுக் கொஞ்சினாள். ஆனால் ராதிகாவுக்கு அம்மா
March 24, 2024
பஷீரின் புகழ்பெற்ற ‘ஜன்ம தினம்’ என்ற சிறுகதை மீதான கல்பற்றா நாராயணனின் வாசிப்பனுபவம். பெரும்பாலான பஷீரின் படைப்புகளைப்போலவே இதுவும் சுயசரிதைத்தன்மைகொண்ட சிறுகதை. இந்த கட்டுரையில் மேற்கோள் காட்டப்பட்டிருக்கும் சிறுகதை வரிகள் தடிமனான எழுத்துகளில் கொடுக்கப்பட்டிருக்கிறது.
March 22, 2024
புவியீர்ப்புக்கு நீர் அளிப்பதைப் போலான முழுமையான விசுவாசம் படைப்பூக்கப் பனிகளுக்கு தேவை - இதில் எந்த சந்தேகமும் வேண்டாம். படைப்பூக்கத்தின் அடர்வனத்தில் உலவும் ஒருவருக்கு இது தெரியவில்லையென்றால், இதை அவர் உணர்ந்துகொள்ளவில்லை என்றால் அவர் வழி தவறுவது உறுதி. கூரையில்லாத நித்தியத்தின் மீது பெருங்காதல் இல்லையென்றால் அவர் பத்திரமாக வீட்டிலிருப்பதே நல்லது. அப்படியான ஒருவர் நிச்சயம் மதிப்பான, உபயோகமான அழகான மனிதர் தான்.
March 20, 2024
வேறு வார்த்தைகளில் சொன்னால் புகைப்படம் உருவாக்கி அளிக்கும் யதார்த்தம் என்பது சமூகத்தின் குறியீட்டமைப்பு[codes] அதில் எவ்வாறு உள்ளடங்கி இருக்கிறது என்பதை பொறுத்தது. அந்த குறியீட்டமைப்புகளில் எவற்றை உள்ளடக்குவது எவற்றை விடுப்பது என்பது புகைப்படம் எடுப்பவனின் தேர்வு. கையில் வயலினோடு இருப்பவர் இசைக்கலைஞராக இருக்க வேண்டியது இல்லை. படமெடுப்பவர் அப்படி ஒரு தோற்றத்தை உருவாக்குகிறார். அவ்வளவுதான்.
March 18, 2024
கர்த்தரை செபித்துக்கொண்டிருந்த கைகளுக்கு அருகில் உடலைக் கிடத்தி சாய்ந்து உட்கார்ந்து கொண்டான். ஆட்களின் நடமாட்டம் குறைவாகயிருந்த அந்த நடைமேடையில் மதிய வெய்யிலின் உஷ்ணம் பரவி தவழ்ந்திருந்தது. இருப்புப் பாதைகளின் கம்பிகளில் அது பிரதிபலித்தது. மதிய உணவை முடித்திருந்த அந்த பார்வையற்ற ஜோடி சிறிய நிழலுக்குள் தங்களது உடலை சுருக்கியபடி உட்கார்ந்திருந்தனர். ஓரமாகயிருந்த அவர்களது ஒரு பையில் விற்பனைக்கான பென்சில், பேனா மற்றும் இதரவைகளின் கட்டுகளுக்கிடையில் துறுத்தியபடி வெளியே