
அகழ் பங்களிப்பாளர்கள் மற்றும் வாசகர்களுக்கு வணக்கம்.
அகழ் இணையதளத்தின் அமைப்பு ஒரு தானியங்கி அப்டேட்டினால் உருமாறியிருக்கிறது. அதனால் பதிவுகளும் ஆசிரியர் குறிப்புகளும் குலைந்துள்ளன. அவற்றை விரைந்து சீரமைக்க முயன்று வருகிறோம். தடங்கலுக்கு வருந்துகிறோம். பல பதிவுகளில் ஆசிரியர் குறிப்புகள் தாமாக மறைந்துவிட்டன. அதற்காக எழுத்தாளர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்.
இடைப்பட்ட நேரத்தில் நாங்கள் ஆச்சர்யப்படும் அளவுக்கு வாசகர்களிடமிருந்து விசாரிப்புகள் வந்த வண்ணம் உள்ளன. நேற்றுக்கூட முன்பின் அறிமுகமில்லாத ஒரு வாசகர் உரிமையாக தளத்தை சீரமைக்கக் கோரி மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். தமிழில் ஒரு சிற்றிதழுக்கு இத்தகைய ஆதரவு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தொடர்ந்து ஆதரவு நல்குவோருக்கு நன்றி.
விரைவில் தளம் சீர் பெறும். பதிவுகளும் வெளிவரும்.
அகழ் ஆசிரியர் குழு

அகழ்
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.

அகழ் ஆசிரியர் குழுவினருக்கு,
உங்கள் இதழைத் தொடர்ந்து கவனித்தும் வாசித்தும் வருகிறேன். கவிதைத்தேர்விலும், சிறுகதைத்தேர்விலும் கொஞ்சம் கூடுதல் அக்கறை செலுத்தினால் நன்றாக இருக்கும் என்பது என் எண்ணம்.
மொழியாக்கச் சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளை கொஞ்சம் கூடுதலாக்கினால் நன்றாக இருக்கும்.
கூடுதலாக, இளம் எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்களின் ஆக்கங்களை இடம்பெறச் செய்வதற்கான யோசனையைப் பரிசீலனை செய்யவும் கேட்டுக் கொள்கிறேன்.
– அகழின் அன்பான வாசகன்